
பல மணி நேரம் பெய்த கடும் மழையால் கெடா மாநிலத்திலுள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இன்று காலை 8 .00 மணி வரையில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 264 பேர் 15 தற்காலிக துயர்துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர். பாடாங் தெராப்,பாலிங் மற்றும் சிக் ஆகியவையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களாகும் என கெடா தேசிய பொது தற்காப்பு படையின் வெள்ளப் பேரிடர் நடவடிக்கைப் பிரிவின் தலைவர் கேப்டன் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.



