
மலேசியா, பேராக் தைப்பிங் நகரில் தமிழர் திருநாள் விழா கொண்டாடுவதற்கு முழு முயற்சி எடுத்த தமிழ்ச்சீலர் மா.செ. மாயதேவன் காலாமானர். திருமுகம் அச்சகம் நடத்தி் அதன் உரிமையாளராகவும் இருந்த அவர் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் தமிழர் திருநாள் விழா நடத்த வட மாநிலத்தில் முன்னின்ற தமிழ்த் தகையாளர் ஆவார். தம் இறுதி காலம் வரை தமிழாக வாழ்ந்தவரான மாயதேவனின் மறைவு பேரிழப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



