
நாட்டில் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த ஆகஸ்டு மாதம் வரை 280 கோடி வெள்ளியைச் செலவிட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த செலவினத்தில் 260 கோடி வெள்ளி தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கும் 21 கோடி வெள்ளி தனியார் மருத்துவர்களுக்கு வழங்குவதற்கும் 1 கோடியே 90 லட்சம் வெள்ளி சுகாதார அமைச்சின் தளவாடங்களை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்



