
கெடா பாலிங்கில் கோவிட் -19 தடுப்பூசி போட்டதால் ஒரு பெண் மாணவி இறந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைக் கெடா மாநிலச் சுகாதாரத் துறை மறுத்துள்ளது. இதன் இயக்குநர் டாக்டர் ஓத்மான் வாரிஜோ, தனது தரப்பு இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தியதாகவும், குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்று கண்டறிந்ததாகவும் கூறினார். இறந்த அம்மாணவி, எஸ்.பி.எம் முடித்தவர் என்பது கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்
