
வரும் 15 ஆவது பொதுத்தேர்தலில் தம்புன் நாடாளுமன்றத் தொகுதியை தற்காத்துக் கொள்ள மீண்டும் அத்தொகுதியில் போட்டியிடுவேன் என நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு கூறினார். வரு பொதுத்தேர்தலில் பேரா மாநில பிகேஆர் தலைவர் பர்ஸா வாபா சல்வாடோர் ரிசால் தம்மை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவரை களத்தில் சந்திக்க அனைத்து ஏற்பாடுகளையும் மிகுந்த கவனமுடன் செய்து வருவதாக பெர்சத்து கட்சியின் துணைத் தலைவருமான அவர் தெரிவித்தார். இவர் சாதாரணவர் அல்ல.ஒரு காலத்தில் அவர் பிரதமர் பதவிக்கும் தகுதியானவர் என்பதால் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளதாக சென்டெரியாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அகமட் பைசால் கூறினார்.
