
தேசிய முன்னணி கூட்டணியில் மஇகா இன்னமும் நீடிப்பதாக அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார். இருப்பினும் அடிமட்ட கருத்துகளுக்கு நாங்கள் மதிப்பு கொடுக்க வேண்டும். தேசிய முன்னணியில் மசீச, அம்னோ மற்றும் ம இகா இடம்பெற்றுள்ளது. இந்த மூன்று கட்சிகளும் போராட்ட காலத்தில் இணைந்த கட்சிகள் ஆகும். டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் தற்போது தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்து கருத்துரைக்கும்படி நிருபர்கள் அவரிடம் கேட்டபோது தொகுதி ஒதுக்கீடு குறித்து இதுவரை தேசிய முன்னணி மற்றும் அம்னோவிடம் இருந்து அழைப்பு வரவில்லை என்றார் அவர்.
