
வெளிநாடுகளில் கருப்பு பணம் மூலம் சொத்துக்களை குவித்த அரசியல்வாதிகள் உட்பட பிரபலங்கள் பட்டியலை பனாமா பேப்பர்ஸ் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த panama papers குறித்து நாடாளுமன்றத்தில் விரைந்து விவாதிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அஸாஹரிடம் மேல் முறையீடு செய்துள்ளார். நேற்று என்னுடைய கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. இது முக்கியமான விவகாரம் என்பதால் உடனடியாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேல்முறையீட்டு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்இந்த panama papers பாட்டிலில் மலேசியாவைச் சேர்ந்த துன் டைம் ஜைனுடின், நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல், அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ் லியோங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
