
சிலாங்கூர் மாநில 2022 ஆண்டுக்கான வரவு பட்ஜெட்டில் ஹிஜ்ரா அறவாரியத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து 8 கோடி வெள்ளியாக நிலை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக சிலாங்கூரில் பொருளாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் தொழில்முனைவோர் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிக்கவும் வாய்ப்பு கிட்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார். சிலாங்கூர் மந்திரி புசார் கூறியது போல் பொருளாரத் துறையில் சிலாங்கூர் விரைவாக முன்னேற வேண்டுமானால் அதிகமான தொழில்முனைவோர் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
