
சிலாங்கூர் ஜூனியர் ஸ்டார் 2021 பாடும் திறன் போட்டி முதல் சுற்று இரு தினங்களாக சீராக நடைபெற்றது. அக்டோபர் 24 ஆம் தேதி நடக்கும் அரையிறுதி சுற்றில் 100 பங்கேற்பாளர்களில் இருந்து சிறந்த 20 பேரைத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜார்ஜ் கூறினார். இப்போட்டியில் வெற்றியாளர்களுக்கு 14,000 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றார்



