
இஸ்ரேல் ராணுவம் நடத்திக்கொண்டிருக்கும் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மலேசியா உதவிகளை வழங்கும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
அங்கு பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் மலேசியா தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கும்.
அரச சார்பற்ற இயக்கங்களும் மலேசியர்களளும் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டிருக்கும் மோசமான தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் உயிர் இழந்துள்ளனர்.
மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதலை உலகம் கண்டிக்கும் வேலையில் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவோம் என்று அவர் சொன்னார்.
