
நோன்பு பெருநாளின் போது பண்டார் பாரு செந்தூல் ஸ்ரீ பேராக் குடியிருப்பில் போலீசார் மீது பட்டாசு கொளுத்திப் போட்ட சம்பவம் தொடர்பில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக செந்தூர் மாவட்ட போலீஸ் தலைவர் பெ எங் லாய் தெரிவித்தார் 14 முதல் 16 வயதுக்குட்பட்ட அந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தோசமாக பட்டாசு வெடித்து கொண்டிருந்தபோதே கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர்.
எங்களுக்கு திருப்தி இல்லாததால் அவர்கள் மீது பட்டாசு கொளுத்திப் போட்டதாக மாணவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.
