
மலாக்கா மாநில முன்னாள் முதல்வரும் சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் கெஅடிலான் சார்பில் அஹாசான் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். முன்பு சுங்கை ஊடாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் இப்போது பக்கத்தான் ஹரப்பானில் இணைந்துள்ளனர். அதேசமயம் பந்தாய் குண்டோர் சட்டமன்ற தொகுதியில் டத்தோ நூர் அஸ்மான் அமானா கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
