
நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தல் மிக விரைவில் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதால் பக்கத்தான் ஹரப்பான் இப்போதே தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று மலாக்கா மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவர் பிரசாத் குமார் பிரகாசம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை ஒரு படிப்பினையாக ஏற்று பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இப்போதே தாராகுவோம்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.
கெஅடிலான் கட்சி உதவித் தலைவர்களான ரபிஸி ரம்லி மற்றும் நூருல் இஷாவும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
