
கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் எழுச்சி பேரணி நாட்டின் அரசியல் தலையெழுத்தை மாற்றி எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிண்ட்ராஃப் எழுச்சி பேரணியால் கைது செய்யப்பட்ட ஐந்து ஹிண்ட்ராஃப் தலைவர்களும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டனர். ஹிண்ட்ராஃப் எழுச்சி பேரணியில் பங்கேற்றவர்களும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். இன்று நவம்பர் 25 ஆம் தேதியில் ஹிண்ட்ராஃப் எழுச்சி பேரணி 14 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. கண்ணீர் புகை குண்டு களையும் எதிர் கொண்டு இந்திய சமுதாயமே உரிமை கோரி வீதியில் போராடிய காட்சிகள் இன்னமும் வரலாற்றியல் நிலைத்து நிற்கின்றன.
