
மலேசியக் குடும்பப் பள்ளியை உருவாக்க வேண்டும் என்ற சபா அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடினின் பரிந்துரையை கெஅடிலான் தகவல் பிரிவின் துணைத் தலைவர், ஜி.மணிவண்ணன் கடுமையாகச் சாடினார். புங் மொக்தாரின் இப்பரிந்துரை இந்நாட்டில் சமூகநல உதவிகள், பொருளாதாரம், இனவாதம், சமய அவமதிப்பு ஆகியவற்றில் சமத்துவமின்மையாய் இருப்பதைத்தான் காட்டுகிறது. பொதுவாக நாட்டின் ஒற்றுமை விவகாரத்தை எடுத்துக் கொண்டால் ஏன் தாய்மொழிப் பள்ளிகளை மட்டுமே அரசியல்வாதிகள் எப்போதும் குறி வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே தெரியவில்லை என்றார் அவர்.
