
ஒரு கோவிட்-19 சுய பரிசோதனை கருவி தற்போது 4 வெள்ளி 90 காசு விலையில் வாங்கலாம் என்று உள்நாட்டு வாணிபப் பயனீட்டாளர் விவகார அமைச்சர், டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். இந்த கருவி 99 ஸ்பீட்மார்ட்டில் வாங்கலாம். இந்நாட்டில் கோவிட் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முயற்சியாக மக்களின் சுமைகளைக் குறைக்கும் அதே சமயம் வர்த்தகர்களின் ஒத்துழைப்பிற்கும் மதிப்பளிக்கும் வகையில் இத்திட்டம் தமக்கு மன மகிழ்ச்சியைத் தருவதாக அலெக்ஸாண்டர் குறிப்பிட்டார்.
