
கடந்த வாரம் நடைபெற்ற மலாக்கா மாநில்சச் சட்டமன்றத் தேர்தலில் சுங்கை ஊடாங் தொகுதியில் உள்ள இராணுவப் படை 18 வாக்குச் சாவடிகளில் 17இல் தாம் தோல்வியுற்றதைத் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று மலாக்கா மாநில அம்னோ துணைத் தலைவர் டத்தோ முகமட் அலி முகமட் தெரிவித்தார். நாடு சுதந்திரம் பெற்றது முதல் எந்த தேசிய முன்னணி வேட்பாளரும் இந்த தொகுதியில் இதுபோல் தோல்வியடைந்தது வரலாற்றில் இதுவரை நிகழ்ந்ததில்லை. எனினும், இதில் ஏதோ வெளிவேலை நிகழ்ந்திருக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. வெற்றி அல்லது தோல்வி என்பது போட்டியின் கலாச்சாரம் ஆகும். இருந்த போதிலும் நான் இராணுவப் படை ஒரே ஒரு வாக்குச் சாவடியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்றார் அவர்.
