
போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே.தர்மலிங்கம் செய்திருக்கும் மேல் முறையீட்டு மனு வரும் நவம்பர் 30ஆம் தேதி செவிமடுக்கப்படும் என்று அவரது சகோதரி, ஷர்மிளா தெரிவித்தார். இதுகுறித்து எங்களின் வழக்கறிஞர், எம்.ரவி தொலைபேசி வாயிலாகத் தெரியப்படுத்தினார் என்று அவர் குறிப்பிட்டார். தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் நாகேந்திரனுக்கு கருணை காட்டும் படி அனைத்துலக மனித உரிமை ஆணையம் மற்றும் மலேசிய அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
