
சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1,000 வெள்ளி உதவித்தொகை ஜனவரி இறுதிக்குள் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடி உதவிகளைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் விண்ணப்பம் செய்வதற்கான எளிய முறை இன்று அறிவிக்கப்படும். ஷபாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றும் பணி முழுமையடைந்துள்ளது. இப்போது சுத்தம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளோடு உணவு விநியோகமும் இன்னும் தொடர்கிறது என்று அவர் சொன்னார்.
