
வெள்ளம் வடிந்த போதிலும் தற்காலிக துயர் துடைப்பு மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். சிலாங்கூர் மாநில பேரிடர் செயல்குழுவின் முடிவுக்குப் பின்னரே துயர் துடைப்பு மையங்களை மூடுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும் வசதிக்காகவும் துயர் துடைப்பு மையங்கள் தொடர்ந்து செயல்படும். பெரும்பாலான வீடுகள் இன்னும் சுத்தம் செய்யப்படாததால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இங்கு தங்கி வேண்டியுள்ளது என்றார் அவர்.
