33.8 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

நான்கு அமைச்சர்களை காணவில்லை! கண்டுபிடித்துக் கொடுத்தால் 1,000 வெள்ளி வெகுமதி

நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஷ்டப்படும் மக்களுக்கு உதவ வேண்டிய 3 அமைச்சர்கள் மற்றும் 1 துணை அமைச்சர் களத்தில் இறங்கவில்லை. தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஷாமுடின், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அமாட் பைசால் அசுமு, நீர் வளம் சுற்றுசூழல் அமைச்சர் துவான் இப்ராஹிம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துணை அமைச்சர் சாஹாடி ஜைனுல் ஆகியோரே காணாமல் போன நான்கு அமைச்சர்கள் என்று பேரா உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் அராபாட் தெரிவித்தார். மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தார்கள். இவர்களுக்கு உதவ வேண்டிய இந்த நான்கு அமைச்சர்களும் காணவில்லை. ஆகவே இவர்களை கண்டு எடுத்துக் கொடுத்தால் ஆயிரம் வெள்ளி வெகுமதி வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles