
விடுமுறைக்கு வெளிநாடு சென்ற சில அமைச்சர்கள் நாடு திரும்பி இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். நாடு திரும்பிய அமைச்சர்களின் பெயரை அவர் அறிவிக்கவில்லை. நாடு திரும்பிய அமைச்சர்கள் இப்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட மோசமான பேரிடர் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வெளிநாடு சென்ற அமைச்சர்கள் உடனடியாக நாடு திரும்பும்படி சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
