
பொருளாதாரம் மற்றும் நோய்த்தொற்று தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஜொகூர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதை ஜொகூர் பக்கத்தான் ஹரப்பான் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் ஜொகூர் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஒஸ்மான் சபியான் காலமானார். இதனால் ஆளுங்கட்சி 28 இடங்களையும் எதிர்க்கட்சி 27 இடங்களையும் வைத்திருக்கிறது. பெரும்பான்மை இல்லாததால் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ டாக்டர் ஹஸ்னி குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
