26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

சேரும் சக்தியும் இல்லாத பள்ளியை அமைச்சர் ரீனா சுத்தப்படுத்தும் காணொளியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

வெள்ளத்தில் பாதிக்கப்படாத ஒரு பள்ளியை குடும்ப மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா நீரை ஹரூண் நீரைப் பாய்ச்சி சுத்தப்படுத்தும் காணோலி நேற்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் மிகக்கடுமையாக சாடியுள்ளனர். வெள்ளத்தில் சேரும் சகதியுமாக காட்சி தராத அந்தப் பள்ளியை இவர் எதற்காக நீரைப் பாய்ச்சி கழுவிக் கொண்டிருக்கிறார் என்று நெட்டின்சன்கள் மிக கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை கழுவ வேண்டியது தானே. அதை இது எந்தவொரு சேறும் சகதியும் இல்லாத இடத்தை இவர் நீரைப் பாய்ச்சி கழுவிக் கொண்டிருப்பது எதற்காக என்று நெட்டிசன்கள் சாடியுள்ளார். சில நெட்டிசன்கள் கடுமையான வார்த்தைகளில் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்தபோது தூக்கு காலணியை அணிந்திருந்தார். இப்போது சேரும் சக்தியும் இல்லாத இடத்தை இவர் கழவி கொண்டிருக்கும் காட்சிகள் நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles