
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது அனைத்து உடமைகளையும் இழந்து பரிதவிக்கிறார்கள். இவர்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டூழிய இயக்கங்கள் பேருதவி புரிந்து வருகின்றன. இந்நிலையில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள். தங்களது வீடுகளை சுத்தம் செய்யும் இவர்களின் சேவையை பாதிக்கப்பட்ட மக்கள் நெகிழ்ச்சியோடு பாராட்டி வருகிறார்கள்.
