
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட எழுச்சி மிகு சிலாங்கூர் திட்டம் மூலம் மொத்தம் 22 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது நன்கொடையாளர்கள் தனிநபர்கள், நிறுவனங்கள், கெடா மற்றும் கிளந்தான் மாநில அரசாங்கங்கள் மூலம் இந்த நன்கொடை பெறப்பட்டதாக மத்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். தாராள மனதுடன் நன்கொடைகளை வழங்கிய அனைத்து நன்கொடையாளர்களுக்கும் சிலாங்கூர் மாநில அரசு நன்றி தெரிவிக்க விரும்புகிறது என்று அவர் சொன்னார்.
