
நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் துயரத்திலிருந்து மீளவில்லை. வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் சேதம் அடைந்திருப்பதால் இப்போது புதிய பொருட்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசு தலா ஆயிரம் வெள்ளி வழங்க முன் வந்துள்ளது. இருப்பினும் இபிஎப் எனப்படும் ஊழியர் சேம நிதி ஐ சித்ரா திட்டத்தின் கீழ் எங்களுக்கு பத்தாயிரம் வெள்ளி வழங்கப்பட வேண்டுமென்று வெள்ளத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா மக்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
