
மனிதர்களுக்கு சாதாரணமாக ஏற்படும் சளிக்கு எதிராக மனித உடலுக்குள் ஏற்படும் இயற்கையான தடுப்பு அரண் போன்ற அமைப்பு, கொரோனா கிருமிக்கு எதிராகவும் சிறிய அளவில் பாதுகாப்பு வழங்குவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அறிவியல் சார்ந்த பருவ இதழான ‘நேச்சர் கொம்யூனிகேஷன்ஸ்’, இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. சாதாரண சளியால் பாதிக்கப்பட்ட பிறகு, எதிர்காலத்தில் இந்தப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட நோயெதிர்ப்பு செல்களின் இயக்கம் மேம்பட்டுள்ள மனிதர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறைவாக உள்ளதாம். அதற்காக, இந்த இயற்கையான பாதுகாப்பை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான் முழு பா



