
யுக்ரேன் நாட்டில் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. அந்த மண்டலங்களில் அமைதி காக்கும் பணியை ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புதின் அறிவித்துள்ளது, யுக்ரேனை பதற்றத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. யுக்ரேன் எப்போதும் தனி நாடாக இருக்கவில்லை, அது அமெரிக்காவின் காலனியாகவே இருந்து வந்திருக்கிறது என்றும் நேட்டோ அமைப்பில் யுக்ரேன் சேருவது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்றும் புடின் கூறியுள்ளார் . ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்த கவலையை நேட்டோ அமைப்பு புறக்கணிப்பதாகவும் கூறி, ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு நியாயம் தேட முயல்கிறார் புடின்
