
நாடெங்கும் பள்ளித் தவணை தொடங்கியுள்ள நிலையில் அனைவரின் கவனமும் இளம் மாணவர்களிண் பள்ளிப் பை சுமைமீது குவிந்துள்ள நிலைமை நாடாளுமன்றத்திலும் பிரதிபலித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த கல்வித் துறை துணை அமைச்சர் மா ஹங் சூன், பிள்ளைகளின் பள்ளிப் பையில் புத்தகங்களின் எடை மூன்றில் ஒரு பங்குகூட இல்லை என்றும் வீட்டில் இருந்து எடுத்துச்செல்லும் உணவு, தண்ணீர் புட்டி, எழுது பொருட்கள், முஸ்லிம் மாணவர்கள் பள்ளி நேரத்திற்குப் பின் கலந்து கொள்ளும் சமய வகுப்பான ஆடை போன்ற பொருட்களால்தான் மாணவர்களின் புத்தகப்பையின் எடை அதிகமாக உள்ளது என்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இதன் தொடர்பில் கூலாய் எம்பி தியோ நீ ச்சிங் கேள்வி எழுப்பினார்.
