
குறைப் பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளை 17 நாட்களில் கோலாலம்பூர் Tunku Azizah மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் பிரித்து சாதனைப் படைத்துள்ளனர்.
2.7 கிலோகிராம் எடைகொண்ட அந்த இரட்டை குழந்தைகள், கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் வாயிலாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக, அம்மருத்துவமனையின் குழந்தை அறுவை சிகிச்சைப் பிரிவின் நிபுணர் டத்தோ டாக்டர் சகாரியா சஹாரி தெரிவித்தார்.
