
கள்ளக் குடியேறிகளை ஏற்றிக் கொண்டு மலேசியாவை நோக்கி பயணித்த படகு, இந்தோனேசிய கடற்கரைப் பகுதியில் மூழ்கியதில் இருவர் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
26 பேர் காணாமல் போயிருப்பதாக இந்தோனேசிய தேடல் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். அந்த மீனவப் படகில் 89 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது.
அவர்கள் அண்டை நாடான மலேசியாவிற்குள் வேலை தேடி, சட்டவிரோதமாக நுழையும் முயற்சியினை மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலே பெரிய அலை மோதி அந்தப் படகு கவிழ்ந்தது.
