
கட்சித் தாவல் தடுப்புச் சட்ட மசோதாவை, உறுதியளித்தபடி குறிப்பிட்ட கால வரையறைக்குள் மக்களவையில் தாக்கல் செய்யாவிட்டால், அரசாங்கத்துடன் எதிர்கட்சிகள் செய்துக் கொண்ட கருத்திணக்க உடன்பாட்டை, நம்பிக்கைக் கூட்டணி மீட்டுக் கொள்ளும் என ஜசெக புதிய தலைவர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு கட்சி தாவுவது, நாட்டில் ஜனநாயக நடைமுறையை முழுமையாக சீரழித்திருக்கிறது. எனவே அந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென அரசாங்கத்தை நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் லிம் குவான் எங் தெரிவித்தார்
