
பிரான்ஸ் நாட்டில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். இவர் எதிர்காலத்தில் உலகில் என்னென்ன நடக்கும் என்பதை பாடல்கள் போல எழுதி வைத்து உள்ளார். சித்தர்கள் பேசும் பரிபாஷை போன்று அந்த பாடல் வரிகள் உள்ளன.
அந்த வரிகளில் உள்ள அர்த்தங்கள்படி குறிப்பிட்ட நிகழ்வுகள் நடந்தது பிறகே தெரிய வந்தண. குறிப்பாக நாஸ்டர்டாம் மறைவுக்குப் பிறகுதான் அவர் எழுதி வைத்துள்ள குறிப்புகள் ஒவ்வொன்றாக நடக்க தொடங்கின. 2022-ம் ஆண்டு உலகில் அணுகுண்டுகள் வெடிக்கும். அதனால் ஏற்படும் கதிர்வீச்சால் உலகின் தட்ப வெப்ப நிலை மாறி பனிப்பாறைகள் உருகும். இது கடல் நீர் மட்டத்தை அதிகரிக்க செய்யும் என்றும் எழுதி உள்ளார். இவை ஒவ்வொன்றாக நடப்பதாக நிபுணர்கள் தெரிவித்துவரும் நிலையில் 2023-ம் ஆண்டு மிகப்பெரிய உலகப்போர் நடைபெறும் எனவும் அவரின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
