
Buloh Kasap வட்டாரத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய பனிக்கட்டி மழை பெய்தது குறித்து மக்கள் வியப்படைந்தனர்.
வீட்டின் கூரைகளில் கல் விழுவது போன்ற சத்தம் கேட்டவுடன் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது மழையுடன் சேர்ந்து பனிக்கட்டிகளும் விழுந்ததாக பலர் தெவித்தனர்.
சுமார் 15 நிமிடங்களுக்கு பனிக்கட்டி மழை பெய்ததாக Taman Yayasan- ஐச் சேர்ந்த 53 வயது Asmah Mohamad தெரிவித்தார். உணவு வாங்குவதற்காக வெளியில் சென்றபோது தாம் அணிந்திருந்த தலைக்கவசத்தில் பனிக்கட்டி மழை விழுந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்ததாக மற்றொரு ஆடவர் தெரிவித்தார். இந்தப் பனிக்கட்டிகளை படம் எடுத்த பலர், அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
