
நாட்டில் மார்ச் மாதம் தொடங்கிய வெப்ப அலை ஏப்ரல் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பொது மக்கள் அதிக நீரை அருந்தும்படியும் வெளிப்-புற நடவடிக்கையைக் குறைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த வெப்ப அலை காரணமாக தற்பொழுது 37 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்ப நிலை உயரும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் முதல் ஏப்ரல் வரை இந்நிலை நீடிக்கும். இந்த வெப்ப அலை காரணமாக புகைமூட்டம் மற்றும் வறட்சி உண்டாவதற்கும் வாய்ப்பு உள்ளதோடு சுகாதாரப் பிரச்னைகளும் ஏற்படும் என்று அத்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது
