
சொஸ்மா சட்டம் தொடர்பான தீர்மானத்திய ஜூலை 31ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்ய ஆலோசித்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் மேலவை தலைவரிடம் விவாதிக்கப்படும் எனவும் இதன் தொடர்பில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் மேலவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவது குறித்தும் உள்துறை அமைச்சு பரிந்துரைக்கும் என்றும் அவர் விவரித்தார்.
சொஸ்மாவுக்கு ஆதரவான 10 அரசு சார்பற்ற இயக்கங்களை சேர்ந்தவர்களை சந்தித்தபின் நடத்தப்பட்ட செய்தியாளர்க் கூட்டத்தில் ஹம்சா ஜைனுடின் இதனைத் தெரிவித்தார்.
