
15ஆவது பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட எண்ணி வருவதாக ஜோகூரின் முன்னாள் மந்திரிபுசார் Hasni Mohamad கூறியுள்ளார்.
எனினும் இது குறித்து இறுதி முடிவு எடுக்கும் உரிமையை அம்னோ தலைமைத்துவத்திடம் விட்டுவிடுவதாக அவர் தெரிவித்தார். ஜோகூர் பாருவில் மாநில அம்னோ கூட்டத்திற்கு தலைமையேற்ற பின் அவர் இதனை தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் 5,589 வாக்குகள் பெரும்பான்மையில் Benut சட்டமன்ற தொகுதியை இவர் மீண்டும் தற்காத்துக்கொண்டார்.
