
அனைத்துலக எல்லைகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, நாட்டிலுள்ள எரிபொருள் நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். மலேசியர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்ட RON95 எரிபொருளை, வெளிநாட்டு பதிவு எண் கொண்ட ஒரு வாகனம் நிரப்பிக் கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியிருக்கிறது. அதையடுத்து, அவ்விவகாரத்தை கடுமையாக கருதுவதாக உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சர் அலெக்சண்டார் நந்தா லிங் தெரிவித்தார்.
