
12 ஆண்டுகளுக்கு முன் 12 வயது சிறுமிமீது பாலியல் வன்கொடுமை புரிந்த ஆடவனை போலீசார் கைது செய்தனர். DNA எனப்படும் மரபணு தரவுகளை பயன்படுத்தி அந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குனர் Abdul Jalil Hassan தெரிவித்தார்.
Balik Pulau , Sungai Pinang கில் உள்ள பட்டறையில் அந்த சிறுமியை 40 வயதுடைய அந்த ஆடவன் கற்பழித்துள்ளான். ஆட்டுப் பண்ணை ஒன்றில் கைது செய்யப்பட்ட அந்த ஆடவன் Balik Pulau மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Abdul Jalil Hasan கூறினார்.
