
உலகுக்கு கொரோனாவை அள்ளிக்கொடுத்த சீனா, தற்போது அந்தத் தொற்றுப்பரவலால் தானே தத்தளிக்கிறது; தடுமாறுகிறது.
குறிப்பாக அந்த நாட்டின் பொருளாதார தலைநகர் ஷாங்காய், பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அங்கு தொடரும் கொரோனா தொற்றால் மக்கள் அதிக அளவில் மடிந்து வருகின்றனர்.
140 கோடி மக்களைக் கொண்ட சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல நகரங்களில் பொது முடக்கம் போடப்பட்டுள்ளது. பெய்ஜிங் நகரில் உணவகங்களுக்கு சென்று சாப்பிட அனுமதி இல்லை. உணவை வாங்கி வீட்டுக்கு எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. பூங்காக்கள், சுற்றுலா தலங்களில் 50 சதவீதத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்
