
நாட்டில் இரண்டு omicron துணைப் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதல் முறையாக Omicron துணைப் பிரிவுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.
அந்த இரண்டு துணைப் பிரிவுகளும் எளிதில் தொற்றக்கூடியது என ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளன. எனவே Omicron துணைப் பிரிவுகளால் ஆபத்தும் சிக்கலும் இருப்பதை உணர்ந்து அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டுமென Khairy கேட்டுக்கொண்டிருக்கிறார்.
