
வீட்டிலிருந்து குரானை போதிக்கும் 74 வயது முதியவர்மீது, சகோதரிகளான இரு சிறுமிகளை பாலியல் வன்முறை செய்ததாக 10 குற்றச்சாட்டுகளும் பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
பினாங்கு, Seberang Perai-யில் உள்ள இரு வேறு செஷன்ஸ் நீதிமன்றங்களில் அந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவேளை, அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, அந்த முதியவன் விசாரணை கோரியுள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவரை, ஐந்து வயதிலிருந்து 8 ஆண்டு காலம் வரை, அந்த முதியவன் பாலியல் வன்முறை செய்ததாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.



