
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள 5 வயதிலிருந்து 11 வயது சிறார்களுக்கு மூன்றாவது கோவிட் தடுப்பூசி போடப்படும். அதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் 12 வயதிலிருந்து 17 வயதுக்குட்பட்டவர்களுக்கும் மூன்றாவது கோவிட் தடுப்பூசி போடப்படுமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
இரண்டாவது கோவிட் தடுப்பூசி போட்டு, 10 மாதங்களுக்குப் பின், மருத்துவமனையில் சேர்க்கப்படும் இளைஞர்கள் மத்தியில் தடுப்பூசியின் எதிர்ப்பு ஆற்றல் 42 விழுக்காட்டிலிருந்து 73 விழுக்காடு வரை குறைந்திருப்பதாக வெளிநாட்டு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
