பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின், கட்சிக்குத் துணைப் பிரதமர் பதவியை வேண்டுமென வலியுறுத்துவதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
பிகேஆர் காப்பார் தொகுதி எம்பியான Abdullah Sani Abdul Hamid நாடு தற்போது இருக்கும் நிலையிலும் பொதுத்தேர்தல் ஓராண்டுக்குள் வரவிருப்பதாலும் அதில் முக்கிய கவனத்தைச் செலுத்தி மக்களின் சுமையைக் குறைத்துவிட்டு, பதவியைப் பற்றிப் பேச வேண்டுமென வலியுறுத்தினார்.
முஹிடின் தேசிய மீட்பு மன்றத்தின் தலைவராக இருந்து உருப்படியான திட்டம் எதனையும் உருவாக்க முடியாமல் இருப்பதால், மக்களின் சுமையைக் குறைத்துவிட்டு, பதவியைப் பற்றிப் பேச வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.