
அண்மையில் நடந்த பிகேஆர் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாகச் சில தலைவர்கள் கூறி வருவதை பொருட்படுத்தாமல், ஆக வேண்டிய காரியத்தை ஆற்றுவோம் என கட்சியின் புதிய துணைத் தலைவர் Rafizi Ramli குறிப்பிட்டார்.
அவர்களின் நோக்கமே தாம் பதவி ஏற்பதைத் தடுத்து, மறு தேர்தலை நடத்துவதே ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவிருப்பதால் அதற்கான காரியங்களில் ஈடுபட வேண்டியிருப்பதால், தோற்றவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, காரியத்தில் எல்லோரும் ஈடுபட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
