15ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் பொது சின்னத்தில் போட்டியிட்டால்தான் வெற்றி பெற முடியும் என்று ஜசெக தலைமைச் செயலாளர் Anthony Loke அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.
ஜொகூர் தேர்தலில் பிகேஆர், அதன் சின்னத்தில் போட்டியிட்ட வேளையில் ஜசெகவும் அமானாவும் பக்காத்தான் சின்னத்தில் போட்டியிட்டன.
இந்த விவகாரம் முதல் தீர்க்கப்பட்டால்தான் மேற்கொண்டு வேலைகளை முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
தேர்தல் அடுத்த ஆண்டில்தான் நடத்தப்படும் என்ற நிலையில், தயாரிப்பு வேலைகளை இப்போதிருந்தே தொடங்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.