
உள்துறை, மனிதவள அமைச்சுகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிப்பதில் குளறுபடியைச் செய்திருப்பதால், அதன் செயல்பாட்டை பிரதமர் தமது முழுமையான கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டுமென கிள்ளான் எம்பி Charles Santiago சால்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.
இந்த இரு அமைச்சுகளின் பொறுப்பாளர்கள் சுயலாப நோக்கோடு செயல்படுவதால் அதன் பிரச்சினை சிக்கலாவதற்கு முன்னர் தகுந்த நடவடிக்கையை பிரமதர் மேற்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று வங்காளதேச தொழிலாளர்களைத் தருவிக்கு நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டதோடு, இந்த ஆள் சேர்ப்பு நடவாடிக்கையில் ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் நடப்பதாகப் பரவலான புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தக் கோரிக்கையை சார்ல்ஸ் சந்தியா கோ பரிந்துரைத்தார்.
