
சிலாங்கூர் சுங்கை சாண்டாங் ஆற்றில் கழிவுப் பொருள்களைக் கொட்டி சிவப்பு நிறமாக்கிய சந்தேகத்தின் பேரில் போர்ட் கிள்ளானின் இயங்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் சிலாங்கூர் சுற்றுச்சூழல் இலாகா அதிரடி சோதனையை நடத்தியது.
அந்த நிறுவனத்தின் சட்டவிரோதமாகக் கழிவுகளைச் சேகரிக்கும் இடம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது 1984ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் வழி, குற்றம் சுமத்தப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
