
சந்தேக நபர் ஒருவரின் விசாரணையில், அவரின் 17 லட்சம் மதிப்பிலான சொத்தினை மூன்றாம் தரப்பு ஒன்றுக்கு மாற்றிதர எழுதித் தர நெருக்குதல் கொடுத்த இரு ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
அந்த எம்ஏசிசி அதிகாரிகள் சம்பந்தமான செய்தி Edisi Siasat (எடிசி சியாசாட்) எனும் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து, அதனை எம்ஏசிசி விசாரித்து சட்டத் துறை அலுவலகத்திற்கு அறிக்கையை அனுப்பியுள்ளது.
சம்பந்தப்பட்ட நபரை விசாரணை செய்தபோது, 3 எம்ஏசிசி அதிகாரிகளும் ஒரு தனிப்பட்ட நபரும் தம்மைச் சூழ்ந்து கொண்டு, அந்த நெருக்குதலைத் தந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
